புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!

சட்டங்கள் | by -அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக் On Aug 31, 2023 Viewers: 291


புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் -  தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!

புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் -

தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்!

  -அபூ தல்ஹா முஹம்மது மஷாரிக்


ஒரு முஸ்லிமான ஆண் பேண வேண்டிய ஒழுங்குகளில் ஒன்றாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒன்று தான் தாடியை வளர்ப்பதும், மீசையைக் கத்தரிப்பதும் ஆகும். தாடியை வளர்க்க வேண்டும், அதை ஒன்றுமில்லாமல் மழித்து விடக்கூடாது என்பதில் பேணுதலாக இருக்கும் பல இஸ்லாமியர்கள், அதே நிலையில் நபியவர்களால் எத்திவைக்கப்பட்ட, மீசையைக் கத்தரிக்கும் பண்பில் ஆகப் புறக்கணிப்பு செய்பவர்களாகவே அதிகம் உள்ளார்கள். எந்தச் செய்தியை நாம் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் என்று, தாடி வைக்காதவர்களைப் பார்த்து எடுத்துரைக்கிறோமோ, அதே செய்தியில் அதே வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வாகத்தான் மீசையைக் கத்தரித்தலும் இடம்பெறுகிறது.


*மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி: 5893, முஸ்லிம் 432, 433, 434, 435, 436.*


என்றாலும் நாம் வாழுகின்ற சமூகமும், சினிமா கலாச்சாரமும் மீசைக்கு கொடுத்த வரைவிலக்கணத்தை பிடித்துக் கொண்டு, அது வீரத்தின் அடையாளம் என்று பலரும் தட்டிக் கழித்து விடுகின்றனர். மீசையே வளராத பலரும் வீரமாக இருப்பார்கள் என்பது எதார்த்தம். வீரம் என்பது மீசையை வைத்து அடையாளம் கொள்ளப்படும் ஒன்று அல்ல. அது வெறும் வெற்று வார்த்தையாகும். 


இதில் கொடுமை என்னவென்றால், நாம் சுன்னாஹ்வை பாதுகாக்க வந்தவர்கள், சுன்னாஹ்வை உயிர்பிக்க உயிரையும் கொடுப்பவர்கள் என்றெல்லாம் பிறருக்கு மார்க்க உபதேசம் செய்பவர்களின் நிலையம் கூட, இதில் அலட்சியமாகவே இருக்கிறது என்பதை இயல்பில் பார்த்தும் வருகிறோம். மேல் உதட்டை மூடிவிடும் அளவிற்கு பழுத்த மீசையுடன், மேடைகளில் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர். மீசையைக் கத்தரிக்கா விட்டால் என்ன நரகமா சென்று விடுவோம்? மீசையைக் கத்தரிக்காவிட்டால் மேடையில் பயான் செய்யக் கூடாதா? அது வெறும் சுன்னாஹ் தானே என்று வேகமாக கேள்வியும் எழுப்புகின்றனர். விரலசைப்பதற்காவும், நெஞ்சின் மீது கைகளை கட்டுவதற்காகவும், ஆமீன் சப்தமிட்டு கூறுவதற்காகவும் மிகப் பெரிய புரட்சியையே கண்ட கொள்கைவாதிகள் தான், இப்படியெல்லாம் அப்பட்டமாக நபியின் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வைப் புறக்கணிக்க குறுக்கு கேள்விகள் கேட்கின்றனர் என்பதை எண்ணி வேதனை அடைகிறேன். இந்தக் கேள்வியைக் கேட்கும் நபர்கள், ஏன் தாடி விஷயத்தில் அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதில்லை? தாடிக்கு ஆர்வமான ஒரு மன நிலையும், மீசையைக் கத்தரிக்க அசவுகரியமான வேறு ஒரு மன நிலையும் நம்மில் ஏற்படுவது ஏன் என்று சிந்தித்துப் பார்க்கவும்... இரண்டையும் ஒரே நிலையில் வைத்துத்தான் தான் நபியவர்கள் நமக்கு கட்டளையிட்டார்கள். 


இஸ்லாம் ஒன்றை நமக்கு போதனை செய்கிறது என்றால், அதை விடவும் அழகான செயல் இவ்வுலகில் இருக்காது, இருக்கவும் முடியாது என்பதை முதலில் நாம் நம்ப வேண்டும். வெளிப்பகுதியில் இருந்து வருகின்ற அசுத்தமான தூசுகள் பல, நமது மீசையில் தொற்றிக் கொள்வதுண்டு. நாம் சுவாசிக்கும் போது மிக வேகமாக அந்த தூசுகள் நமது நுரையீரலை அடைந்து தேவையற்ற தொல்லைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்லமால் நாம் முகத்தை நீரால் சுத்தம் செய்தாலும், மீசைக்குள் தொற்றி இருக்கும் அசுத்தங்கள் அவ்வளவு இலகுவாக சுத்தமாகி விடுவதும் இல்லை. அதேநேரம் மீசையை ஒட்டக் கத்தரித்த ஒருவருக்கு இந்த நிலை ஏற்படாது. நீரால் சுத்தம் செய்யும்போது உடனே முழுமையாக அவை சுத்தமாகி விடவும் செய்யும். ஒவ்வொரு நேர தொழுகையின் போதும் முகத்தைக் கழுவுவதால் மென்மேலும் அந்த இடம் சுத்தமாக ஆகிவிடும். இத்தகைய ஆரோக்கியமான நிலை மீசையை கத்தரிப்பதில் உண்டு. என்றாலும் இவைகளை ஆதாரமாகக் காட்டி நாம் மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று கூறவில்லை. நபியின் கட்டளையை வலுசேர்க்கும் புறக்கருத்துக்கள் இவைகள், அவ்வளவு தான்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகவும், கூடுதல் வார்த்தைகளோடும் நமக்கு இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்கள். அந்த எச்சரிக்கையைப் படிக்கும்போது, இது எந்த அளவிற்கு அவசியமான, வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் என்பதை நமக்குத் தெளிவு படுத்துகிறது.


*யார் மீசையைக் கத்தரிக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர்: ஸைூது பின் அர்கம் (ரலி), நூல்: நஸாயீ 13. தரம் ; ஸஹீஹ்.* 


இவ்வளவு ஆழமாக நபியவர்கள் சொன்ன பிறகும் இதைப் புறக்கணிக்கும் நபர் யாராக இருக்க முடியும் என்பதை அவரவர் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளவும். *சுன்னாஹ்விற்கு உயிரூட்டுதல் என்பது, நாம் விரும்புகின்ற அம்சத்தில் மட்டும் இருத்தல் கூடாது. நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அனைத்திலும் இருக்க வேண்டும்.* அவ்வாறு செயல்படும் நபர்கள் தான், உண்மையில் சுன்னாஹ்வை பாதுகாப்பவர்கள். சுன்னாஹ்விற்கு உயிரூட்டுபவர்கள். எல்லாம் வல்ல இறைவன் அனைத்து காரியங்களிலும், நபியின் சுன்னாஹ்வை முதன்மைப்படுத்தி, நேசம் வைத்து, அதை செயல்படுத்தும் நபர்களாக நம்மை உருவாக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவனாக முடிக்கிறேன்....!

*****

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE